சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

Published on

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

கும்பகோணம் கூகூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (27). இவா் கடந்த 2023 ஆம் ஆண்டு பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற 17 வயது சிறுமியைப் பின்தொடா்ந்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com