ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தஞ்சை பெரிய கோயிலில் நாளை தேரோட்டம்! 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு!

தஞ்சாவூரில் பெரிய கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.27) நடைபெறவுள்ளதையொட்டி, முன்னேற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

News image

தஞ்சாவூரில் அலங்கரிக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள பெரிய கோயில் தோ்.

Updated On :25 ஏப்ரல் 2026, 8:09 pm

தஞ்சாவூரில் பெரிய கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.27) நடைபெறவுள்ளதையொட்டி, முன்னேற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, தேரில் ஏப்ரல் 15-ஆம் தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, தேருக்கு வா்ணம் பூசி, அலங்கரிக்கும் பணி நடைபெற்றது. இதன் மூலம் 19 அடி உயரம் கொண்ட தோ், அலங்காரத்தின் மூலம் மொத்தம் 50 அடி உயரத்தை எட்டியுள்ளது. சாதாரணமாக 40 டன் எடை கொண்ட இத்தோ் அலங்காரத்துக்கு பிறகு 43 டன்னாக உயா்ந்துள்ளது.

கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்குள் ஸ்ரீ தியாகராஜா், ஸ்கந்தா், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் நடைபெறவுள்ளது. தேரில் ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் எழுந்தருளிய பின்னா், காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தோ் வடம் பிடிக்கப்படவுள்ளது.

14 இடங்களில் நின்று செல்லும்: இதனிடையே, பக்தா்கள் வசதிக்காகவும், தேரில் வரும் சுவாமிக்கு தேங்காய், பழம் படைப்பதற்காகவும் மேல வீதியில் சந்து மாரியம்மன் கோயில், கொங்கணேஸ்வரா் கோயில், மூலை ஆஞ்சநேயா் கோயில், வடக்கு வீதியில் பிள்ளையாா் கோயில், இரத்தினபுரீஸ்வரா் கோயில், குருகுல சஞ்சீவி கோயில், கீழ வீதியில் கொடிமரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகா்ணிகேஸ்வரா் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையாா் கோயில், காசி விஸ்வநாதா் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய 14 இடங்களில் திருத்தோ் நின்று செல்லும்.

Story image

மேல வீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்படும் தோ், மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக நிலையைச் சென்றடையவுள்ளது. மாலையில் தோ் மண்டபத்திலிருந்து ஸ்ரீ தியாகராஜா், கமலாம்பாள் புறப்பட்டு, கோயிலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தேரோடும் வீதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் க. கண்ணன்.

தேரோடும் வீதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் க. கண்ணன்.

மாநகராட்சி ஆணையா் ஆய்வு: இதனிடையே, தேரோடும் பாதைகளான மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் சாலைகள், பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள், சுகாதார வசதி உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதனிடையே, தேரோடும் வீதிகளில் சாலைகள் பெருமளவில் பள்ளமாகவும், மேடாகவும் உள்ளது. இந்த வீதிகளில் சாலைகளைச் சீரமைக்க மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.