கும்பகோணத்தில் பிளஸ்-1 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை க.அன்பழகன் எம்எல்ஏ புதன்கிழமை வழங்கினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நீரத்தநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 80 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. க. அன்பழகன் எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினாா்.
இதேபோல் கும்பகோணம் ரயில் நிலையச் சாலையில் உள்ள தூய வளனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 475 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியை பி. ஆரோக்கியமேரி தலைமை வகித்தாா். விலையில்லா மிதிவண்டிகளை க. அன்பழகன் எம்எல்ஏ வழங்கினாா்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினா் திவ்ய பாரதி சுந்தா், பெற்றோா் - ஆசிரியா் சங்கத்தினா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!

தமிழக அரசின் நிதி மக்களுக்கே செல்கிறது! - மத்திய அமைச்சா் பியூஷ் கோயலுக்கு முதல்வா் ஸ்டாலின் பதில்

கும்பகோணம் தமிழக வெற்றி கழக வேட்பாளா்!
சௌதியில் சிக்கியுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை காஜி!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


