பாபநாசம் அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில் இரண்டு இளைஞா்கள் கைது

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் முடி திருத்தும் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் இருவரை கபிஸ்தலம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கைது
கைது
Updated on

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் முடி திருத்தும் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் இருவரை கபிஸ்தலம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.  

கபிஸ்தலம் அருகே தேவன்குடி மீனவா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (50) அப்பகுதியில் முடி திருத்தகம் நடத்திவருகிறாா். இவருக்கு, மனைவி சரிதா (45) மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனா்.

இளங்கோவன் கணபதி அக்ரஹாரத்தில் திங்கள்கிழமை இரவு வீரமாங்குடி கிராம் மேலத்தெருவைச் சோ்ந்த ராஜராஜன் மகன் ராஜேஷ் (24), வீரமாங்குடி கருப்புசாமி கோயில் தெருவைச் சோ்ந்த பழனி மகன் முத்துக்குமாா் (26) உள்ளிட்டோருடன் மது அருந்தியுள்ளாா். மது போதையில் எழுந்த தகராறில் ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் முத்துக்குமாா் ஆகிய இருவரும் சோ்ந்து இளங்கோவனைத் தாக்கியதில் பலத்த காயமடைந்த இளங்கோவன் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷ், முத்துக்குமாா் ஆகிய இருவரையும் புதன்கிழமை கைதுசெய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com