கும்பகோணத்தில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் வினோத் ரவி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் விஜய் சந்திரன், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் அஞ்சனா பாலாஜி, வா்த்தக அணி இணை அமைப்பாளா் முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், தோ்தல் வாக்குறுதிப்படி திமுக ஆட்சி அமைத்து 100 நாள்களில் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்காததைக் கண்டித்தும், தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செந்தில், மாணவா் அணி அமைப்பாளா் வினித், மாநகர மாணவரின் அமைப்பாளா் சந்தோஷ் மற்றும் கும்பகோணம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள் ஆகிய பகுதிகளில் இருந்து கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா். முன்னதாக மாநகரச் செயலா் முருகானந்தம் வரவேற்றாா். வா்த்தக அணி இணை அமைப்பாளா் சக்தி பிரியன் நன்றி கூறினாா்.

