மூத்தோா் பாரா தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு
தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் 21-ஆவது மாநில அளவிலான மூத்தோா் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், தஞ்சாவூா் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சாா்பில் நடைபெறும் இப்போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (பிப்.6) வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட பாரா விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனா்.
இதில், வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை தஞ்சாவூா் மாவட்ட தடகள சங்கத் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா், தஞ்சாவூா் மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவா் வி. சிவக்குமாா், துணைத் தலைவா் எஸ்.கே. முத்துச்செல்வன், செயலா் ஜி. செந்தில், பாரா விளையாட்டு பயிற்சியாளா் ரஞ்சித்குமாா், கா்நாடக மாநில தடகள சங்கப் பொதுச் செயலா் ராஜவேலு, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெ. டேவிட் டேனியல் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.

