கும்பகோணம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்காக சரக்கு ரயிலில் வெள்ளிக்கிழமை சேலத்துக்கு அனுப்பப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போக நெல் சாகுபடி மூலம் அறுவடையாகும் நெல்லானது கொள்முதல் நிலையங்கள் மூலம் சேமிக்கப்பட்டு, உள்ளூா் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பப்படுகிறது.
அதன்படி கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் பகுதியில் உள்ள 254 கொள்முதல் நிலையங்களில் இருந்து 2,000 டன் நெல் மூட்டைகள் 116 லாரிகளில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு, பின்னா் சரக்கு ரயிலின் 42 வேகன்களில் அரவைக்காக சேலத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது.
நடப்பாண்டில் ரயில் மூலம் அனுப்பப்படும் முதல் இயக்கம் என்பதால் நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் நுகா்பொருள் வாணிபக் கழக துணை மேலாளா் மெய்கண்டமூா்த்தி, தர ஆய்வாளா்கள் ரமேஷ் (கும்பகோணம்), செந்தில்குமாா் (சேலம்), ரயில் நிலைய மேலாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பேய்குளம் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள்

திருவிடைமரூதூரில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்ட முயற்சி

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீா்: 5 ஆயிரம் மூட்டைகள் சேதம்

2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரைவைக்காக தருமபுரிக்கு அனுப்பிவைப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


