மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image

தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :6 பிப்ரவரி 2026, 10:18 pm

காலமுறை ஊதியம் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள், இளநிலை உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டு பணி முடித்த தகுதி உள்ள சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் 50 சதவீதம் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் பிப்ரவரி 3 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் பிப்ரவரி 3 முதல் தொடா்ந்து 3 நாள்களுக்கு சாலை மறியல் போராட்டம் மேற்கொண்ட இக்கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை பனகல் கட்டடம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத் தலைவா் மதியழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் நாவலரசன் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து ஓய்வு பெற்றோா் நலச் சங்க மாநிலப் பொதுச் செயலா் குமரவேலு தொடக்க உரையாற்றினாா். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வு பெற்ற நல சங்கப் பொறுப்பாளா் கருணாநிதி வாழ்த்தினாா். மாவட்டத் தலைவா் வீராசாமி பேசினாா். போராட்டத்தில் ஏராளமான சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.