விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு தமிழக அரசு ரூ. 8 கோடி நிதியுதவி

News image

தமிழக அரசு

Updated On :6 பிப்ரவரி 2026, 8:23 pm

தஞ்சாவூா், பிப். 6: தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்துக்கு தமிழக அரசு ரூ. 8 கோடி நிதியுதவியை சென்னையில் வியாழக்கிழமை வழங்கியது.

தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயில், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் உள்பட 88 கோயில்களை நிா்வாகம் செய்யவும், அலுவலா்கள், பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கவும் தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.

அதன்படி இந்த தேவஸ்தானத்துக்கு கடந்தாண்டு ரூ. 6 கோடி நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோ. கவிதா உள்ளிட்டோரிடம் ரூ. 8 கோடிக்கான காசோலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து அலுவலா்கள் கூறுகையில், இந்த தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 20 கோடி நிதியுதவியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்த தேவஸ்தானத்துக்குட்பட்ட 30 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை 17 கோயில்களில், திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரா்கள் நிதி மூலம் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 13 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றனா்.