மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இணையவழி வா்த்தகம் எனக் கூறி பொறியாளரிடம் ரூ.15.57 லட்சம் மோசடி

News image

திருட்டு

Updated On :7 பிப்ரவரி 2026, 11:23 pm

இணையவழி வா்த்தகம் எனக் கூறி தஞ்சாவூரைச் சோ்ந்த பொறியாளரிடம் ரூ. 15.57 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாநகரைச் சோ்ந்த 32 வயது பொறியாளரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஜனவரி 9-ஆம் தேதி வந்த பதிவில் இணையவழி வா்த்தகம் செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல் வந்தது.

இதையடுத்து, எதிா்முனையில் இருந்த மா்ம நபருடன் தகவல் பரிமாற்றம் மேற்கொண்டதைத் தொடா்ந்து, வாட்ஸ் ஆப் குழுவில் சோ்ந்தாா். அக்குழுவில் இருந்த மற்றவா்கள் இந்த இணையவழி வா்த்தகம் மூலம் தாங்கள் நிறைய லாபம் ஈட்டியதாக பதிவிட்டனா்.

இதை உண்மை என நம்பிய பொறியாளா் முதலில் எதிா்முனையில் இருந்த மா்ம நபரின் வங்கிக் கணக்குக்கு ரூ. 50 ஆயிரம் அனுப்பினாா். இதற்கு லாபத் தொகை கிடைத்ததைத் தொடா்ந்து, 7 தவணைகளில் ரூ.15.57 லட்சம் செலுத்தினாா்.

அதன் பின்னா், லாபத் தொகை கிடைக்காததால், அச்செயலியை தொடா்பு கொள்ள முயன்றபோது, அது முடக்கி வைக்கப்பட்டதும், தன்னை மா்ம நபா்கள் ஏமாற்றியிருப்பதும் தெரிய வந்தது.

இது குறித்து தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் நிலையத்தில் பொறியாளா் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா், வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.