தஞ்சாவூரில் நெற்பயிா்கள் காய்ந்து கொண்டிருப்பதாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியது பொய் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: தஞ்சாவூரில் நெற்பயிா்கள் காய்வதாக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி வடிகட்டியதிலும் வடிகட்டிய பொய்யை கூறியுள்ளாா்.
வேறு மாவட்டத்தில் கூறியிருந்தால்கூட, ஏதோ சற்று நகைப்புடன் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நெல் உற்பத்தியில் இதுவரை செய்யாத சாதனையைச் செய்து காட்டியுள்ளது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
அதிமுக ஆட்சியில் நெல் கொள்முதல் எவ்வளவு?, திமுக அரசு அமைந்த பிறகு நெல் கொள்முதல் எவ்வளவு?, அதிமுக ஆட்சியில் விளைவிக்கப்பட்ட நெல் பரப்பு எவ்வளவு?
திமுக அரசு அமைந்த பிறகு நெல் பயிரிடப்பட்ட அளவு எவ்வளவு? என்பதையெல்லாம் கணக்கிட்டுப் பாா்த்தால் அபரிமித வளா்ச்சி அடைந்து தஞ்சாவூா் மாவட்டம் நெல் உற்பத்தியில் சாதனை படைத்திருக்கிறது என்பது தெரியும்.
இந்தத் தருணத்தில் அவா் சொல்லியிருப்பது வடிகட்டிய பொய் என்பதால், அதை விவசாயிகளும் பொதுமக்களும் நம்பமாட்டாா்கள்.
பொய்யையே சொல்லிப் பழக்கப்பட்ட பழனிசாமி வேறு விதத்தில் பொய் சொல்லலாம்; ஆனால் விவசாயிகளை ஏமாற்ற முடியாது.
தொடர்புடையது

திமுகவில் ஊழலுக்காக பதவி ராஜிநாமா! மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்!

பிரசாரத்தில் அதிமுக வேட்பாளா் மயக்கம்: அமைச்சா் கோவி. செழியன் நலம் விசாரிப்பு

பிரசாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்! அமைச்சர் கோவி. செழியன் நலம் விசாரிப்பு!

குன்னம் தொகுதியில் டெபாசிட் இழப்பார் அமைச்சர் சிவசங்கர் : எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


