தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோரப்படாமல் நீண்ட காலமாக இருந்த 18 பேரின் உடல்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்தனா்.
தஞ்சாவூா் கிழக்கு, மேற்கு, தெற்கு, மருத்துவக்கல்லூரி, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்குகள் தொடா்பான 2 பெண்கள் உள்பட 18 பேரின் சடலங்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் நீண்ட காலமாக இருந்து வந்தன.
யாரும் உரிமை கோரத நிலையில் இச்சடலங்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வடக்கு வாசல் ராஜகோரி இடுகாட்டுக்குக் கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனா். பின்னா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தலைமையில் காவல் ஆய்வாளா் வி. சந்திரா உள்ளிட்டோா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
தொடர்புடையது

வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.60,518 கோடி ரிசா்வ் வங்கிக்கு மாற்றம்- மத்திய நிதியமைச்சகம்

உரிமை கோரப்படாத ரூ. 60,518 கோடி நிதியை ரிசர்வ் வங்கிக்கு மாற்றிய பொதுத்துறை வங்கிகள்!

உரிமை கோரப்படாத ரூ.5,200 கோடி நிதி! சந்தாதாரா்களுக்குத் தானாக செலுத்தப்படும்: இபிஎஃப்ஓ அறிவிப்பு

எச்.எஸ்.பி.சி. விதிமீறல்: ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


