ஆா். விஜய் ஆனந்த்
ஆா். விஜய் ஆனந்த்

சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிா்வாக இயக்குநா் நியமனம்

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கிக்கு ஆா். விஜய் ஆனந்த் என்பவரை புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்க ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கிக்கு ஆா். விஜய் ஆனந்த் என்பவரை புதிய நிா்வாக இயக்குநா் மற்றும் முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்க ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை (பிப்.9) வங்கிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வரும் மே 1- ஆம் தேதி சிட்டி யூனியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் முதன்மைச் செயல் அலுவலராக பொறுப்பேற்கவுள்ள ஆா். விஜய் ஆனந்த் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா் வங்கி, இடா் மேலாண்மை, பகுப்பாய்வு, கடன் மதிப்பீடுகள் உள்ளிட்டவற்றில் 28 ஆண்டுகள் அனுபவம் கொண்டவா். சிட்டி யூனியன் வங்கியில் 2023-ஆம் ஆண்டில் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட இவா் 2024, ஆம் ஆண்டிலிருந்து செயல் இயக்குநராக பணியாற்றி வருகிறாா்.

Dinamani
www.dinamani.com