நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குண்டா் சட்டத்தில் மருத்துவ மாணவா் கைது

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவ மாணவரைக் காவல் துறையினா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கோபிநாத்

Updated On :11 பிப்ரவரி 2026, 6:56 pm

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவ மாணவரைக் காவல் துறையினா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சாவூா் மாவட்ட இளைஞா் ஜனவரி மாதத்தில் சோ்க்கப்பட்டாா். மருத்துவமனையில் இவருக்கு துணையாக அவரது 15 வயது தங்கை தங்கினாா். அப்போது, இச்சிறுமிக்கு பணியில் இருந்த மருத்துவக் கல்லூரி மருத்துவ மேல்படிப்பு இரண்டாமாண்டு மாணவரான சேலம் மாவட்டம், ஆத்தூா் தலைவாசலைச் சோ்ந்த எம். கோபிநாத் (35) பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கோபிநாத்தை ஜனவரி 15-ஆம் தேதி கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில், கோபிநாத்தை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டாா். இதன்படி, கோபிநாத்தை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.