மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:23 pm

Syndication

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மத்திய மாவட்டச் செயலா் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் முன்னிலை வகித்தனா்.

திமுக மத்திய மாவட்ட அவைத்தலைவா் சி. இறைவன், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம். மகேந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், மதிமுக மாநகரச் செயலா் துரை சிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி பி. செந்தில்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, திருவையாறு, மேலத்திருப்பூத்துருத்தி, வல்லம், திருவோணம் உள்பட ஏறத்தாழ 40 இடங்களில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.