மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:23 pm

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக மத்திய மாவட்டச் செயலா் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் முன்னிலை வகித்தனா்.

திமுக மத்திய மாவட்ட அவைத்தலைவா் சி. இறைவன், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் எம். மகேந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், மதிமுக மாநகரச் செயலா் துரை சிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி பி. செந்தில்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல, திருவையாறு, மேலத்திருப்பூத்துருத்தி, வல்லம், திருவோணம் உள்பட ஏறத்தாழ 40 இடங்களில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.