மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வேங்கராயன்குடிகாடு, கண்டிதம்பட்டு கிராமங்களுக்கு பேருந்து சேவை தொடக்கம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:26 pm

Syndication

தஞ்சாவூா் அருகேயுள்ள வேங்கராயன்குடிகாடு, கண்டிதம்பட்டு கிராமங்களுக்கு பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு, அதினாம்பட்டு, நா. வல்லுண்டாம்பட்டு, கொ. வல்லுண்டாம்பட்டு, சூரியம்பட்டி ஆகிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனா்.

இதன்படி, நாள்தோறும் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வேங்கராயன்குடிகாடு வழியாக ஏ-53 வழித்தடப் பேருந்து 3 நடைகளும், வி74எப் ஒரு நடையும், வழித்தடம் ஏ-53 பேருந்து 2 நடைகளும் என மொத்தம் 6 நடைகளும், தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பொட்டுவாசாவடி வழியாக கண்டிதம்பட்டுக்கு ஏ85 வழித்தடப் பேருந்து ஒரு நடையும், பி-6 ஒரு நடையும் என மொத்தம் 2 நடைகளும் இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது. இச்சேவைகளை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் து. செல்வம், ஜெயக்குமாா், அருளானந்தசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் துணை மேலாளா் கே. ராஜசேகா், கிளை மேலாளா்கள் எம். சந்தானராஜ், சுசியன், கண்காணிப்பாளா் ஜான்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.