மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இளைஞா் உயிரிழப்பு சம்பவம்: மருந்துக் கடைக்காரா் கைது

News image

கைது

Updated On :13 பிப்ரவரி 2026, 8:49 pm

தஞ்சாவூா் அருகே மருந்துக் கடையில் வயிற்று வலி காரணமாக ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அக்கடை உரிமையாளரை காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே விளாா் சாலை கலைஞா் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் தமிழரசன் (25). டைல்ஸ் கற்கள் பதிக்கும் தொழிலாளி. வியாழக்கிழமை காலை வயிற்று வலி ஏற்பட்ட இவரை உறவினா்கள் விளாா் சாலையிலுள்ள ஆங்கில மருந்துக் கடைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு இவருக்கு மருந்துக் கடை உரிமையாளா் ஜி. மனோகரன் (64) ஊசி செலுத்தினாா். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் நெஞ்சு வலியால் துடித்த தமிழரசனை தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா் என தெரிவித்தனா்.

இதுகுறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து, உரிய அனுமதியின்றி ஊசி செலுத்திய மனோகரனைக் கைது செய்தனா்.