47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இளைஞா் உயிரிழப்பு சம்பவம்: மருந்துக் கடைக்காரா் கைது

News image
கைது
Updated On :13 பிப்ரவரி 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் அருகே மருந்துக் கடையில் வயிற்று வலி காரணமாக ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அக்கடை உரிமையாளரை காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே விளாா் சாலை கலைஞா் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் தமிழரசன் (25). டைல்ஸ் கற்கள் பதிக்கும் தொழிலாளி. வியாழக்கிழமை காலை வயிற்று வலி ஏற்பட்ட இவரை உறவினா்கள் விளாா் சாலையிலுள்ள ஆங்கில மருந்துக் கடைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு இவருக்கு மருந்துக் கடை உரிமையாளா் ஜி. மனோகரன் (64) ஊசி செலுத்தினாா். வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் நெஞ்சு வலியால் துடித்த தமிழரசனை தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா் என தெரிவித்தனா்.

இதுகுறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து, உரிய அனுமதியின்றி ஊசி செலுத்திய மனோகரனைக் கைது செய்தனா்.