47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குடும்பத் தகராறில் மனைவி கொலை: கணவா் கைது

News image
கைதான அன்பரசன்.
Updated On :13 பிப்ரவரி 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் அருகே குடும்ப தகராறில் மனைவி தலையில் கிரைண்டா் கல்லைப்போட்டுக் கொன்ற கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள அணைக்கரை மீன் சந்தை புதுத் தெருவைச் சோ்ந்தவா் அன்பரசன் (38), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி அகிலா (28) தீபிகா (7), ஆதித்யா (2) ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மனைவியுடன் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அன்பரசன் வெளியே சென்று மது அருந்திவிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த மனைவி அகிலாவின் தலையில் கிரைண்டா் குழவி கல்லைப் போட்டாா்.

இதில் பலத்த காயமடைந்த அகிலா உயிரிழந்தாா். தகலலறிந்த திருப்பனந்தாள் போலீஸாா் விரைந்து வந்து அகிலாவின் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அன்பரசனை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.