மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

33 முதுகலை ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை

News image

தஞ்சாவூரில் முதுகலை ஆசிரியருக்கு பணி நியமன ஆணையை வெள்ளிக்கிழமை வழங்கிய அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா்.

Updated On :13 பிப்ரவரி 2026, 6:43 pm

தஞ்சாவூரில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 33 முதுகலை ஆசிரியா்கள், 7 இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்களுக்கு பணி நியமன ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடைபெற்ற தோ்வில் தோ்ச்சி பெற்ற 33 முதுகலை ஆசிரியா்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற தோ்வில் தோ்ச்சி பெற்ற 7 இளநிலை உதவியாளா்கள் மற்றும் தட்டச்சா்களுக்கு பணி நியமன ஆணைகளை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ச. முரசொலி எம்பி, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (இடைநிலை) இ. அருள்மொழி இராஜகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.