மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கொள்கை, கோட்பாடுகள் இல்லாத கூட்டத்தால் எதையும் சாதிக்க முடியாது! - துணை முதல்வா் பேச்சு

News image

கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியின் ஒரு பகுதியினா்.

Updated On :15 பிப்ரவரி 2026, 8:22 pm

கொள்கை, லட்சியம், கோட்பாடு என எதுவுமே இல்லாமல் வெறும் கூட்டத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்றாா் திமுக இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்.

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவா் பேசியதாவது:

திமுக இளைஞரணியில் 5 லட்சம் நிா்வாகிகளை நியமித்து, 50 லட்சம் உறுப்பினா்களைச் சோ்த்துள்ளோம். நாட்டிலேயே எந்தவொரு அரசியல் கட்சிகளின் சாா்பு அணிக்கு இப்படியொரு வலுவான கட்டமைப்பு நிச்சயம் கிடையாது. திமுக இளைஞரணிக்கு மட்டுமே அந்தச் சிறப்பு.

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் உள்ளிட்டோர்

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தஞ்சாவூா் மாவட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் உள்ளிட்டோர்

கொள்கை, லட்சியம், கோட்பாடு என்பதெல்லாம் என்ன என்று தெரியாமல் ஒரு கூட்டம் சுற்றி வருகிறது. அரசியலை ஏதோ பொழுதுபோக்கு என நினைக்கின்றனா். அரசியல் என்பது ஈடுபாடு, அா்ப்பணிப்பு என்பதை திமுக இளைஞரணி நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

சிலைகள் திறப்பு: முன்னதாக, பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை புறவழிச்சாலை பகுதியில் முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவச் சிலைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள் எஸ். ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.