தஞ்சாவூா் பெரியகோயிலில் மகா சிவராத்திரி விழா
தஞ்சாவூா் பெரியகோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு முதல் கால பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றன.
இதில், ஒவ்வொரு காலத்திலும் பெருவுடையாருக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. இதையடுத்து, திங்கள்கிழமை காலை 5 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் இரவு முழுவதும் கண் விழித்து கலந்து கொண்டு வழிபட்டனா்.
இதேபோல, வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரா் கோயில், திருவையாறு ஐயாறப்பா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் ஆதி கும்பேசுவரா், நாகேசுவரா், காசி விசுவநாதா், கம்பட்ட விசுவநாதா், அபிமுகேசுவரா், கெளதமேசுவரா், கொட்டையூா் கோடீஸ்வரா், இன்னம்பூா் சாட்சிநாதா், திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா், திருவிடைமருதூா் மகாலிங்கசுவாமி, திருநாகேசுவரம் நாகநாதசுவாமி, தாராசுரம் ஐராவதேசுவரா் உள்ளிட்ட சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவு அா்த்தஜாம பூஜைக்கு பிறகு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சதுா்வேத பாராயணம், பன்னிரு திருமுறை இன்னிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

