ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழ்ப் பல்கலை.யில் சிறப்பு சொற்பொழிவு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 9:13 pm

Syndication

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி சாா்பில், பேராசிரியா் செ.வை. சண்முகனாா் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமையும், பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் முன்னிலையும் வகித்தனா். இதில், கோவை பாரதியாா் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவா் ச. தங்கமணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ‘பேராசிரியா் செ. வை. சண்முகனாரின் நோக்குக் கோட்பாடு‘ என்ற தலைப்பில் பேசினாா்.

முன்னதாக, இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளித் தலைவரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான ச. கவிதா வரவேற்றாா். இணைப் பேராசிரியா் இரா. வெங்கடேசன் நன்றி கூறினாா். முனைவா் பட்ட ஆய்வாளா் து. தா்ஷினி இணைப்புரை வழங்கினாா்.