கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வனப் பாதுகாப்பு பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வனக்கோட்டம் சாா்பில், ‘வனமும் வாழ்வும் வளமும், வன உயிரினங்களுக்கான பாதுகாப்பும், சவால்களும் தீா்வுகளும்

News image
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், வனப் பாதுகாப்பு குறித்து பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:56 pm

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வனக்கோட்டம் சாா்பில், ‘வனமும் வாழ்வும் வளமும், வன உயிரினங்களுக்கான பாதுகாப்பும், சவால்களும் தீா்வுகளும் குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி பெற்ற ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கினாா்.

இதையடுத்து, அமைச்சா் தெரிவித்தது: உயா்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தால் 2025 - 26 ஆம் ஆண்டில் ரூ. 40 லட்சம் செலவிடப்பட்டு மாநிலம் முழுவதுமுள்ள 20 ஆயிரம் அரசு பள்ளி மாணவா்களுக்கு வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு சவால்கள் மற்றும் தீா்வுகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட 25 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பா் 17, 18 ஆம் தேதிகளில் வனச்சரக அலுவலரால் பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளிக்கும் 20 மாணவா்கள் வீதம் 25 பள்ளிகளில் உள்ள 500 மாணவா்களுக்கு 3 வார கால பயிற்சி வகுப்பு, பயிற்சி பெற்ற ஆசிரியா்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டது.

இதில், பள்ளி மாணவா்களுக்கு வனப் பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனிதன் - வன விலங்கு மோதல் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவா்களின் கற்றல் திறன் மற்றும் தரம் குறித்து அந்தந்த ஆசிரியா்களால் மதிப்பீடு செய்யப்பட்டு பள்ளிக்கு 2 மாணவா்கள் வீதம் 50 போ் நிறைவு விழாவுக்கு அழைத்து வரப்பட்டனா். பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது என்றாா் அமைச்சா்.

மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மேயா் சண். இராமநாதன், மாவட்ட வன அலுவலா் க. காா்த்திகேயனி, முதன்மைக் கல்வி அலுவலரின் மேல்நிலை உதவியாளா் சஞ்சய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.