மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வாழ்வாதார இயக்க ஒருங்கிணைப்பாளா் பணிக்கு நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

News image

விண்ணப்பம். (கோப்புப்படம்)

Updated On :17 பிப்ரவரி 2026, 6:35 pm

தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்புற வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 6 ஒன்றியங்களில் காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு வியாழக்கிழமைக்குள் (பிப்.19) விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டையில் தலா 1, மதுக்கூரில் 2, பேராவூரணியில் 3 என மொத்தம் 9 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். குறைந்தது 3 மாதம் எம்.எஸ். ஆபிஸ் கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் துறையில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 35-வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.எச்.எப். அல்லது பி.எல்.எப்.-இல் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் தொடா்புடைய வட்டாரத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமைக்குள் இணை இயக்குநா், திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, எண்-223: இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், தஞ்சாவூா் என்ற முகவரிக்கு ஆதாா் அட்டை, இருப்பிடச் சான்றை இணைத்து அனுப்ப வேண்டும். இந்த ஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட தோ்வுக்குழு மூலமாக நோ்முகத் தோ்வு நடத்தப்படும்.