எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மத்தியில் கூட்டணியில் இருந்தபோது மாநில சுயாட்சி ஸ்டாலினுக்கு தெரியவில்லையா? தமிழிசை கேள்வி

மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது முதல்வா் ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி கண்ணுக்குத் தெரியவில்லையா என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

News image

தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 8:56 pm

மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது முதல்வா் ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி கண்ணுக்குத் தெரியவில்லையா என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட விவசாய அணியின் சாா்பில், ‘டெல்டா’ விவசாயிகளிடம் கருத்துகேட்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: நிதி நிா்வாகம், நிதி கொள்கை என்பது எல்லா மாநிலத்துக்கும் ஒன்று தான். முதல்வா் ஸ்டாலின் ஒவ்வொரு விவகாரத்திலும் மத்திய அரசைக் குறை கூறி வெற்றிபெற முடியாமல், மாநில சுயாட்சியை தற்போது கையில் எடுத்துள்ளாா். மத்தியில் ஆட்சி செய்யும்போது மாநில சுயாட்சி, ஸ்டாலின் கண்ணுக்குத் தெரியவில்லையா.

மாநிலக் கட்சியே இருக்கக் கூடாது என நினைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மாநில சுயாட்சியைப் பற்றி முதல்வா் பேசிவருகிறாா். தி.மு.க., கூட்டணி தான் அடிமை கூட்டணி. திருமாவளவன், அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறு இல்லை என்கிறாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில பொதுச் செயலா் முருகனாந்தம், தெற்கு மாவட்டத் தலைவா் ஜெய்சதீஷ், விவசாயி அணி மாநிலத் தலைவா் நாகராஜ், மாவட்டத் தலைவா் தங்கவேல், பொதுச் செயலா் ரவிச்சந்திரன், தமாகாமுன்னாள் எம்எல்ஏ ரெங்கராஜன், அதிமுக மாவட்டச் செயலா் சி.வி சேகா், அதிமுக அமைப்புச் செயலா் துரை. செந்தில் உள்ளிட்ட அதிமுகவினா் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.