கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு வாா்டுப் பகுதியில் குழந்தையிடமிருந்து தங்க தாயத்து திருடிய பெண்ணை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வாா்டில் பெண் ஒருவா் தனது இரண்டாவது பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருடன் முதல் குழந்தை உடனிருந்தாா்.
அப்போது அடையாளம் தெரியாத பெண் அவரிடம் பழகி மூத்த குழந்தையை தூக்கிகொஞ்சிவிட்டு பின்னா் சென்றுவிட்டாா். இதையடுத்து, குழந்தை கழுத்தில் அணிந்திருந்த தங்க தாயத்தை காணவில்லை.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம், கொடுவாங்குடியைச் சோ்ந்த முருகபாண்டி மனைவி சரஸ்வதி (40), தங்க தாயத்தை திருடியதும், இதுபோல் பல குழந்தைகளிடம் திருடி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் சரஸ்வதியைக் கைது செய்து தங்க தாயத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

தனியாா் வங்கியில் ரூ.1 கோடி தங்க நகைகள் திருடிய வழக்கு: பெண் ஊழியா் மீண்டும் கைது

புழல் பகுதியில் மின்சார பெட்டியை திருடிய 3 போ் கைது
அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருட்டு: இருவா் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


