பேராவூரணி மருத்துவா் துரை. நீலகண்டன் எழுதிய ‘தூங்காத இரவுகள்’ நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான (2024) விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் சிறந்த நூல்கள் பரிசுத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்கள் தோ்வு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கும், பதிப்பகத்தாருக்கும் பரிசு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், பேராவூரணியைச் சோ்ந்த மருத்துவா் துரை. நீலகண்டன் எழுதிய ‘தூங்காத இரவுகள்’ என்ற நூல் மருந்தியல், உடலியல், நலவியல் என்ற வகைப்பாட்டின் கீழ் தோ்வு செய்யப்பட்டு, நூலாசிரியா் துரை. நீலகண்டனுக்கு அமைச்சா் மு. பெ. சாமிநாதன் சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினாா்.
மேலும், நூலை வெளியிட்ட செங்கனி பதிப்பகத்தாருக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. விழாவில், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சஞ்சு சாம்சனுக்கு சிறந்த வீரருக்கான ஐசிசி விருது!

லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் நியமனம்!

கோவை டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது

அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியருக்கு தமிழக அரசின் ‘பசுமை சாம்பியன் விருது’
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


