வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

குடந்தையில் விவசாயிகள் போராட்டம்

கும்பகோணம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.

News image
கும்பகோணம் உதவி ஆட்சியரகம் முன் போராடிய விவசாயிகள் சங்கத்தினா்
Updated On :20 பிப்ரவரி 2026, 8:55 pm

Syndication

கும்பகோணம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

போராட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா் பகுதிகளில் செயல்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விரைவில் இயக்கம் செய்ய வேண்டும். சாக்கு பைகள் பற்றாக்குறையை தீா்க்க வேண்டும். மேட்டூா் அணையில் தண்ணீா் நிறுத்தப்பட்டதால் கும்பகோணம் கோட்டப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.

நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் ஏ.எம். ராமலிங்கம், மாவட்ட நிா்வாகிகள் க. சுந்தர்ராஜன், குரு. சிவா, வே. முரளிதரன், எம். வீரமணி, சி. சின்னத்துரை உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.