தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
ஆா்ப்பாட்டம் நடத்திய வழக்குரைஞா்கள்
Updated On :20 பிப்ரவரி 2026, 8:56 pm

Syndication

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக் கோரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நீதிமன்றம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் சா. விவேகானந்தன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்தும், மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் சங்கத் துணைச் செயலா் ஐயப்பன், முன்னாள் துணைத் தலைவா் செந்தில்குமாா் முன்னாள் செயலா் தரணிதரன், முன்னாள் செயலா் செல்வம், மூத்த வழக்குரைஞா் ஜெயபால், கென்னடி கண்ணன், மகேஷ், இளங்கோவன், காஸ்பரோவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.