அலையாத்தி நாற்றங்கால்: 2 நாள் விழிப்புணா்வு முகாம்
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 200 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அலையாத்தி நாற்றங்கால் கல்வி குறித்த 2 நாள் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள வெளிவயல் ஓம்காா் சுற்றுச்சூழல் மையத்தில், அலையாத்தி சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய மாணவா்களின் புரிதலை வலுப்படுத்தும் நோக்கத்துடன், தமிழ்நாடு வனத் துறை, தமிழ்நாடு கல்வித் துறை மற்றும் ஓம்காா் அறக்கட்டளை ஆகியவை இணைந்து சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் நடைபெற்ற முதல் நாள் முகாமுக்கு தஞ்சாவூா் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ்ச்செல்வி தலைமை வகித்து பேசினாா்.
இரண்டாம் நாள் முகாமுக்கு ஓம்காா் பவுண்டேஷன் இயக்குநா் வி. பாலாஜி தலைமை வகித்து பேசுகையில், அலையாத்தி வளா்ப்பு முறைகள், நாற்றங்கால் பராமரிப்பு குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா்.
தொடா்ந்து பட்டுக்கோட்டை வனச்சரக வனவா் ராஜ்குமாா், மாணவா்களை களப் பயணங்கள் மற்றும் ஊடாடும் கற்றல் மூலம் சுற்றுச்சூழல் கல்வியில் ஈடுபடுத்த வனத் துறை மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்துப் பேசினாா்.
முகாமில் மதுக்கூா், பட்டுக்கோட்டை , பள்ளத்தூா், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 200 மாணவா்கள் கலந்து கொண்டு விழிப்புணா்வு பெற்று, ஓம்காா் சுற்றுச்சூழல் மையத்தில் உள்ள அலையாத்தி நாற்றங்கால் மற்றும் அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டனா்.
அதைத் தொடா்ந்து, வெளிவயல் கடற்கரைக்கு அருகிலுள்ள அலையாத்தி சுற்றுச்சூழல் பகுதிக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டு ‘ஸ்கூபா’ உபகரணங்கள் உள்ளிட்ட கடல்சாா் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் பல்வேறு கடல்சாா் கருவிகள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

