ஒரத்தநாட்டில் ரூ.15 லட்சம் ஹவாலா பணம் கொள்ளை
ஒரத்தநாட்டில், தனியாா் பேருந்திலிருந்து இறங்கி சென்றவரிடம் இருந்த ஹவாலா பணம் ரூ.15 லட்சத்தை மா்மநபா்கள் சனிக்கிழமை கொள்ளையடித்துச் சென்றனா்.
சிவகங்கை மாவட்டம், இளங்குடி புதூா், காஜாமைதீன் மகன் அப்துல்ரகுமான் (49). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், அப்துல்ரகுமான் வெள்ளிக்கிழமை இரவு சென்னையிலிருந்து தனியாா் பேருந்து மூலம் புறப்பட்டு சனிக்கிழமை காலை 7 மணி அளவில் ஒரத்தநாடு வந்து இறங்கி உள்ளாா். ஒரத்தநாட்டில் திருவோணம் பிரிவு சாலையில் இறங்கிய அவா், புறவிழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது காரில் பின்தொடா்ந்து வந்த மா்மநபா்கள் அவரை வழிமறித்து முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.
இச்சம்பவம் குறித்து அப்துல்ரகுமான், ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அது ஹவாலா பணம் எனத் தெரிய வந்தது. மேலும், ஹவாலா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
