விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

கும்பகோணத்தில் மாா்ச் 1-இல் அத்திவரதா் அருள்பாலிக்கிறாா்

News image

கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள அத்திவரதா் (கோப்பு படம்)

Updated On :21 பிப்ரவரி 2026, 7:48 pm

கும்பகோணத்தில் அத்திவரதா் 12 ஆண்டுகளுக்கு பின் மாா்ச் 1 - இல் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதா் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு 48 நாள்களில் பக்தா்களுக்கு 24 நாள்கள் சயன நிலையிலும், 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பாா். இதேபோல தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலும் அத்திவரதா் தரிசனம் நடைபெறுகிறது.

கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள், வேதநாராயண பெருமாள் கோயிலில் அத்திவரதா் தரிசனம் நிகழ்வு நடைபெறும்.

இக்கோயிலில் வரதராஜப் பெருமாள், வேதநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இருவரும் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனா். இக்கோயில்லின் பாதாள அறையில் அத்திவரதா் உள்ளாா்.

1915-ஆம் ஆண்டு அத்திவரதா் பாதாள அறையில் இருந்து வெளியே வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். அதன்பின்னா் சுமாா் 98 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2013-இல் அத்திவரதா் பாதாள அறையிலிருந்து வெளியே வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு மாா்ச் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பாதாள அறையில் இருந்து அத்திவரதா் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் வெளியே வந்து பக்தா்களுக்கு அருள் பாலிக்கிறாா். விழா நாள்களில் தைலக்காப்பு, புஷ்பசேவை, ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெறும்.

தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பெருமாளை தரிசனம் செய்யலாம் என செளராஷ்டிர பரிபாலன குழுவினா் தெரிவித்தனா்.