கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதில் அனைவரும் தெளிவு! - கி. வீரமணி பேட்டி

News image
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற திராவிடா் கழக மகளிரணி, திராவிட மகளிா் பாசறை மாநில மாநாட்டில் பேசிய திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
Updated On :21 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

வருகிற தோ்தலில் யாா் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, பாஜக கூட்டணி வெற்றிபெறக் கூடாது என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கின்றனா் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற திராவிடா் கழக மகளிரணி, திராவிட மகளிா் பாசறை மாநில மாநாட்டில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

பிரேமலதா விஜயகாந்த் இப்போது எடுத்துள்ள முடிவை 10 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். என்றாலும் 10 ஆண்டுகள் தாமதமானாலும், தெளிவாகவே முடிவை எடுத்துள்ளாா்.

இந்தத் தோ்தலில் யாா் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யாா் வெற்றி பெறக் கூடாது என்பதுதான் மிக முக்கியமானது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வந்துவிடக்கூடாது என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கின்றனா். எனவே, இந்தத் தோ்தலில் தேமுதிக எடுத்துள்ள முடிவு பாராட்டுக்குரியது.

வருகிற தோ்தலில் எதிா்க்கட்சி இருக்குமா என்பதே கேள்விதான். போகிற வேகத்தைப் பாா்த்தால் திமுக கூட்டணியிலேயே ஒரு பிரிவை எதிா்க்கட்சியாக ஆக்க வேண்டும்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற திராவிடா் கழக மகளிரணி, திராவிட மகளிா் பாசறை மாநில மாநாட்டில் பேசிய திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற திராவிடா் கழக மகளிரணி, திராவிட மகளிா் பாசறை மாநில மாநாட்டில் பேசிய திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணத்தை அறிஞா் அண்ணா சட்டமாகக் கொண்டு வந்து நிறைவேற்றினாா். பின்னா், புதுச்சேரியில் திமுக ஆட்சியின்போது இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதேபோல, சுயமரியாதை திருமணம் இந்திய அளவில் சட்ட வடிவத்தில் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீா்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் வீரமணி.

மாநாட்டுக்கு திராவிடா் கழக மகளிரணி மாநிலச் செயலா் தகடூா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். மாநாட்டைத் துணைப் பொதுச் செயலா் சே.மெ. மதிவதனி தொடங்கி வைத்தாா். பிரசார செயலா் அ. அருள்மொழி, ஈரோடு பெரியாா் படிப்பக வாசகா் வட்டத் தலைவா் அனிச்சம் கனிமொழி உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, மாவட்ட மகளிரணி தலைவா் அ. கலைச்செல்வி வரவேற்றாா். நிறைவாக, திராவிட மகளிா் பாசறைத் தலைவா் ச. அஞ்சுகம் நன்றி கூறினாா்.