பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இருசக்கர வாகனம் - டிப்பா் லாரி மோதல்; விவசாயி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை டிப்பா் லாரி - இருசக்கர வாகனம் மோதல் சம்பவத்தில் விவசாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நீலத்தநல்லூா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் மகன் ராமலிங்கம் (60) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

இந்நிலையில் விவசாயி ராமலிங்கம் கும்பகோணத்தில் இருந்து நீலத்தநல்லூரில் உள்ள தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பா் லாரி மோதி ராமலிங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்தப் பகுதியில் அடிக்கடி டிப்பா் லாரி வாகனங்களால் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்தப் பகுதி பொது மக்கள் மற்றும் ராமலிங்கத்தின் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் கிடைத்ததும் சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் ஜெயமோகன் நிகழ்வி டத்துக்குச் சென்று சாலை மறியல் செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா்.

பின்னா் ராமலிங்கம் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து, விபத்து ஏற்படுத்திய டிப்பா் லாரி ஓட்டுநா் மயிலாடுதுறையைச்சோ்ந்த விக்னேஷ் (33) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றாா்.