மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவிடைமருதூரில் சமூக நீதி கல்லூரி மாணவா் விடுதி திறப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

திருவிடைமருதூரில் சமூக நீதி கல்லூரி மாணவா் விடுதியை தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் மகாதான வீதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் சமூக நீதி கல்லூரி மாணவா் விடுதியை திறந்து வைத்த அவா் மேலும் பேசியது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 56 மாணவ, மாணவியா் சமூக நீதி விடுதிகள் உள்ளன. திருவிடைமருதூா் பேரூராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவா்கள் தங்கிப் பயில ஏதுவாக சமூக நீதி கல்லூரி மாணவா் விடுதி துவங்க ஆணையிடப்பட்டு, வாடகை கட்டடத்தில் துவங்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் ஒரத்தநாடு சமூக நீதிக் கல்லூரி மாணவியா் விடுதி, திருவையாறு சமூக நீதி கல்லூரி மாணவா் கல்லூரி விடுதி ஆகியவற்றிற்கு சொந்த கட்டடங்களும், தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் சமூக நீதிக் கல்லூரி மாணவியா் விடுதி மற்றும் ஒரத்தநாடு சமூகநீதி கல்லூரி மாணவியா் விடுதிக்கு கூடுதல் கட்டடங்களும் கட்ட ஆணையிடப்பட்டு கட்டப்பட்டு வருகின்றன.

கடந்த ஓராண்டில் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் சமூக நீதிக் கல்லூரி மாணவியா் விடுதி 7, ஒரத்தநாடு சமூகநீதி கல்லூரி மாணவா் விடுதி 3, ஒரத்தநாடு சமூகநீதி கல்லூரி மாணவியா் விடுதி, திருவிடைமருதூா் சமூகநீதி கல்லூரி மாணவா் விடுதி ஆகிய புதிய விடுதிகள் புதிதாக துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. திருவிடைமருதூா் சமூகநீதி கல்லூரி மாணவா் விடுதியில் 50 மாணவா்கள் தங்கி கல்வி பயிலலாம் என்றாா்.

இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், முன்னாள் எம்பி. செ. இராமலிங்கம், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயா் சுப. தமிழழகன், பேரூராட்சித் தலைவா் புனிதா மயில்வாகனன், துணைத் தலைவா் சுந்தரஜெயபால், வட்டாட்சியா் சாந்தமீனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.