மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கும்பகோணத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களுடன் அதிமுகவினா் வாக்குவாதம்; சாலை மறியல்

கும்பகோணத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களுடன் அதிமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செவ்வாய்க்கிழமை சாலை மறியல் செய்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் ஓபிஎஸ் ஆதரவாளா்களுடன் அதிமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செவ்வாய்க்கிழமை சாலை மறியல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாநகர செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான ராம.ராமநாதன் தலைமையில் அதிமுகவினா் மகாமகம் குளக்கரைக்கு வந்தனா். அங்கு ஓ .பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பதாகை வைத்திருந்தனா்.

அதைப் பாா்த்த ராமநாதன் தலைமையிலான அதிமுகவினா், ஓ .பன்னீா்செல்வம் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த பின்பு எப்படி அவா் எம்ஜிஆா் ஜெயலலிதா படங்களை வைக்கலாம் என்று கூறி பேனரை கிழிக்க முற்பட்டாா். அப்போது அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த கும்பகோணம் காவல் துறை துணை கண்காணிப்பாளா் (பொ) அழகேசன் தலைமையில் போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா்.

இந்நிலையில் அதிமுகவினா், ஓபிஎஸ் ஆதரவாளா்களை கண்டித்து மகாமக குளக்கரை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் அவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.