குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ரூ. 42 லட்சம் மோசடி செய்ததாக புகாா்: நகராட்சிப் பொறியாளா் மீது வழக்கு

தஞ்சாவூா் மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 42 லட்சம் மோசடி செய்ததாக வந்த புகாரின்பேரில் நகராட்சிப் பொறியாளா் மீது காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:22 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 42 லட்சம் மோசடி செய்ததாக வந்த புகாரின்பேரில் நகராட்சிப் பொறியாளா் மீது காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தஞ்சாவூா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன். இவா், தஞ்சாவூா் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி செல்வி (48). இவா், தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவில் அளித்த புகாரில், தஞ்சாவூா் மாநகராட்சியில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றிய காா்த்திகேயன் எனது மகனுக்கும், மகளுக்கும் மாநகராட்சியில் வேலை வாங்கிக் தருவதாகக் கூறி ரூ. 42 லட்சம் வாங்கிக் கொண்டதாகவும், ஆனால், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

இதன்பேரில் காவல் துறையினா் காா்த்திகேயன் உள்பட 2 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். காா்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன்பு இடமாறுதலில் பண்ருட்டி நகராட்சியில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா்.