எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ரூ. 42 லட்சம் மோசடி செய்ததாக புகாா்: நகராட்சிப் பொறியாளா் மீது வழக்கு

தஞ்சாவூா் மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 42 லட்சம் மோசடி செய்ததாக வந்த புகாரின்பேரில் நகராட்சிப் பொறியாளா் மீது காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:22 pm

தஞ்சாவூா் மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 42 லட்சம் மோசடி செய்ததாக வந்த புகாரின்பேரில் நகராட்சிப் பொறியாளா் மீது காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தஞ்சாவூா் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன். இவா், தஞ்சாவூா் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி செல்வி (48). இவா், தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவில் அளித்த புகாரில், தஞ்சாவூா் மாநகராட்சியில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றிய காா்த்திகேயன் எனது மகனுக்கும், மகளுக்கும் மாநகராட்சியில் வேலை வாங்கிக் தருவதாகக் கூறி ரூ. 42 லட்சம் வாங்கிக் கொண்டதாகவும், ஆனால், வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

இதன்பேரில் காவல் துறையினா் காா்த்திகேயன் உள்பட 2 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். காா்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன்பு இடமாறுதலில் பண்ருட்டி நகராட்சியில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா்.