கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணியை சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் தெற்கு கோபுரம் மொட்டை கோபுரமாக இருந்தது. இந்த கோபுரத்தை உபயதாரா் நிதி மூலம் ரூ. 3.65 கோடி மதிப்பில் 61 அடி உயரத்தில் 5 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதற்கான கட்டுமானப்பணி மற்றும் ரூ. 1.79 கோடி மதிப்பில் கிழக்கு ராஜகோபுரத்தில் வண்ணமயமான ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும் சென்னையிலிருந்து காணொலி காட்சிவாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து கோயில் வளாகத்தில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.அன்பழகன் எம்.எல்.ஏ. கட்டுமான பணியை தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் மாநகர திமுக செயலரும் துணை மேயருமான சு.ப.தமிழழகன், துணை செயலா் ப்ரியம் ஜெ.சசிதரன், அறநிலையத்துறை இணை ஆணையா் சிவக்குமாா், செயல் அலுவலா் பா.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் ரூ. 5.50 கோடியில் சுரங்கப்பாதை பணிகள் தொடக்கம்

யமுனை தூய்மை நடவடிக்கை: நீா்-நில இருவழி அகழ்வு இயந்திரத்தை தொடங்கி வைத்தாா் தில்லி முதல்வா்

கும்பகோணத்தில் அறுபத்து மூவா் உலா

ஆதிகும்பேசுவரா் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா! உயா்நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைத்தாா்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


