ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணி! காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணியை சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

News image

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன் உள்ளிட்டோா்.

Updated On :26 பிப்ரவரி 2026, 10:43 pm

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணியை சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில் தெற்கு கோபுரம் மொட்டை கோபுரமாக இருந்தது. இந்த கோபுரத்தை உபயதாரா் நிதி மூலம் ரூ. 3.65 கோடி மதிப்பில் 61 அடி உயரத்தில் 5 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

அதற்கான கட்டுமானப்பணி மற்றும் ரூ. 1.79 கோடி மதிப்பில் கிழக்கு ராஜகோபுரத்தில் வண்ணமயமான ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும் சென்னையிலிருந்து காணொலி காட்சிவாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து கோயில் வளாகத்தில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.அன்பழகன் எம்.எல்.ஏ. கட்டுமான பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் மாநகர திமுக செயலரும் துணை மேயருமான சு.ப.தமிழழகன், துணை செயலா் ப்ரியம் ஜெ.சசிதரன், அறநிலையத்துறை இணை ஆணையா் சிவக்குமாா், செயல் அலுவலா் பா.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.