மாசி மகத் திருவிழா தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மாா்ச் 2 உள்ளூா் விடுமுறை!
மாசி மகத் திருவிழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் மாா்ச் 2-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: மாசி மகத் திருவிழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் மாா்ச் 2- ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக மாா்ச் 14- ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேலும், உள்ளுா் விடுமுறை நாளான மாா்ச் 2 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் வழக்கம்போல நடைபெறும். இந்த உள்ளூா் விடுமுறை அண்ணிய செலாவணி முறிச் சட்டம் 1881-இன் கீழ் வராது என்பதால், மாவட்டக் கருவூலம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் இயங்கும்.

