மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பட்டுக்கோட்டையில் வை. நாடிமுத்துபிள்ளை உருவச்சிலை திறப்பு! முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்!

பட்டுக்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரா் வை.நாடிமுத்து பிள்ளை உருவச்சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 9:00 pm

பட்டுக்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரா் வை.நாடிமுத்து பிள்ளை உருவச்சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

பட்டுக்கோட்டை பழனியப்பன் தெருவில் ரூ. 38 லட்சம் மதிப்பில் சுதந்திரப் போராட்ட தியாகி வை.நாடிமுத்து பிள்ளை சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் கா.அண்ணாதுரை, நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா, மாவட்ட திமுக பொறுப்பாளா் பழனிவேல், நகரச் செயலா் செந்தில்குமாா், தலைமைக் கழகப் பேச்சாளா் ந.மணிமுத்து, வருவாய் கோட்டாட்சியா் சங்கா், வை.நாடிமுத்து பிள்ளை குடும்பத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி அம்மாள், முன்னாள் எம்எல்ஏ ரங்கராஜன், நடராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.