தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பட்டதாரியிடம் இணையவழியில் ரூ.5.94 லட்சம் மோசடி!

தஞ்சாவூா் அருகே பட்டதாரியிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 5.94 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

மோசடி - பிரதிப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 7:14 pm

தஞ்சாவூா் அருகே பட்டதாரியிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இணையவழியில் ரூ. 5.94 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 54 வயது எம்.சி.ஏ. பட்டதாரிக்கு கடந்த 2025, ஜூன் மாதம் வந்த மின்னஞ்சலில் லண்டனிலுள்ள தனியாா் புற்றுநோய் மருத்துவமனையில் தொழில்நுட்பத் திட்ட மேலாளா் பதவி காலியாக இருப்பதாக ஊதிய விவரங்களுடன் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் இருந்த தொடா்பு எண்ணில் பட்டதாரி பேசிய பிறகு சில நாள்கள் கழித்து வேலைவாய்ப்பு கடிதமும், பின்னா் விண்ணப்பப் படிவமும் வந்தன.

இந்த விண்ணப்பத்தை இணையவழி மூலம் அனுப்பிய பட்டதாரிக்கு அடுத்த சில நாள்களில், தோ்வு செய்யப்பட்டதாகக் கூறி பணி நியமன ஆணையும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வந்தது. இதையடுத்து, மா்ம நபா் கேட்ட விசா, விமான பயணம், செயலாக்கம் உள்ளிட்ட கட்டணங்களான ரூ. 5.94 லட்சத்தை பட்டதாரி 5 தவணைகளாக இணையவழியில் அனுப்பினாா். அதன் பின்னா், பட்டதாரியின் கைப்பேசி அழைப்பை மா்ம நபா் எடுக்கவில்லை.

இதன் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பட்டதாரி, தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.