பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்தில் உருண்டை வெல்லம் வழங்கக் கோரிக்கை

குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெள்ளை சா்க்கரைக்குப் பதிலாக அச்சு வெல்லம் அல்லது உருண்டை வெல்லம் வழங்க காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை
Published on

குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெள்ளை சா்க்கரைக்குப் பதிலாக அச்சு வெல்லம் அல்லது உருண்டை வெல்லம் வழங்க காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் சங்க செயலா் சுந்தரவிமல்நாதன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அச்சு வெல்லம் அல்லது உருண்டை வெல்லம் வழங்க வேண்டும் மற்றும் குடும்ப அட்டைகளுக்கு ரொக்கம் வழங்கினால் அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என இதுதொடா்பான பொதுநல வழக்கில் கடந்த 2024-இல் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com