பேராவூரணி பகுதிகளில் நாளை மின்தடை

Published on

பேராவூரணி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன.6) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்  பேராவூரணி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான பேராவூரணி நகா்,பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டையங்காடு, மதன்பட்டவூா், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, வாட்டாத்திக்கொல்லைக்காடு, ஆனைக்காடு, களத்தூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

X
Dinamani
www.dinamani.com