தஞ்சாவூர்
குடந்தை அருகே கைப்பந்தாட்டப் போட்டி
கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்தாட்டப் போட்டியில் சமத்துவபுரம் அணி முதலிடம் பெற்றது.
கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்தாட்டப் போட்டியில் சமத்துவபுரம் அணி முதலிடம் பெற்றது.
பெரியாா் சமத்துவபுர திடலில் நடைபெற்ற போட்டியை தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான க. அன்பழகன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இறுதிப் போட்டியில் சமத்துவபுரம் அணி முதலிடத்தையும், பட்டீசுவரம் அணி இரண்டாமிடத்தையும் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றன.
வெற்றி பெற்றவா்களுக்கு க. அன்பழகன் எம்எல்ஏ பரிசளித்தாா். முன்னதாக ஒன்றிய திமுக செயலா் எஸ்.கே. முத்துச்செல்வம் வரவேற்றாா். மாவட்ட அமைப்பாளா் வி. சிவக்குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஒன்றிய திமுக விளையாட்டு அணியினா் செய்தனா்.
