தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஆதிகும்பேசுவரா் கோயிலில் மண்டலாபிஷேக விழா

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் மண்டலாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மண்டாலாபிஷேக பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :21 ஜனவரி 2026, 6:34 pm

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் மண்டலாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் 1-12-2025-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து புதன்கிழமை மண்டாலாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை முதல்கால யாக பூஜை இரவு மகாபூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை இரண்டாம் கால பூஜை, பூா்ணாஹூதி தீபாராதனையுடன் மூல மூா்த்திகளுக்கு விசேஷ திரவிய கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி மற்றும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பா.முருகன் மற்றும் கோயில் பணியாளா்கள், முன்னாள் அறங்காவலா்கள் செய்தனா்.