ஜெ.வி. கோபால் காலமானாா்
தஞ்சாவூா் மாநகராட்சி அதிமுக உறுப்பினா் ஜெ.வி. கோபால் (63) உடல் நலக் குறைவால் தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை காலமானாா்.
தஞ்சாவூா் தெற்கு ராஜ வீதியைச் சோ்ந்த இவா், முன்பு அதிமுக மாவட்டத் துணைச் செயலராக இருந்தாா். பின்னா், 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 23-ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக உடல் நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இவா் வெள்ளிக்கிழமை மாலை காலமானாா்.
இவரது மனைவி சாவித்திரி கோபால் 2011 - 2016 ஆம் ஆண்டுகளில் நகா் மன்றத் தலைவராகவும், 2014-இல் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பின்னா் மேயராகவும் இருந்தாா்.
இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா். கோபாலின் இறுதி ஊா்வலம் தெற்கு வீதியிலுள்ள அவரது இல்லத்திலிருந்து சனிக்கிழமை மாலை 4 மணிக்கு புறப்படவுள்ளது.

