முஸ்லிம் லீக் மாநாடு: உளவுத் துறை டிஐஜி ஆய்வு

முஸ்லிம் லீக் மாநாடு: உளவுத் துறை டிஐஜி ஆய்வு

கும்பகோணத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் முஸ்லிம் லீக் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உளவுத் துறை டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு ஆய்வு
Published on

கும்பகோணத்தில் புதன்கிழமை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் முஸ்லிம் லீக் மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உளவுத் துறை டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் தமிழக அளவில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு புதன்கிழமை மாலை தாராசுரம் புறவழிச்சாலையில் நடைபெறுகிறது.

முதல்வா் பங்கேற்கும் நிகழ்வு என்பதால் தமிழக உளவுத் துறை டிஐஜி திருநாவுக்கரசு செவ்வாய்க்கிழமை மாலை மாநாட்டு திடலுக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினாா்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராம் மற்றும் போலீஸாா் இருந்தனா்.

Dinamani
www.dinamani.com