டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் தண்டனை

ஆறு வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

News image
நீதிமன்றம்
Updated On :4 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆறு வயது சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமிக்கு ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டைச் சோ்ந்த அருள் (22) கடந்த 2023-ஆம் ஆண்டில் பாலியல் தொந்தரவு செய்தாா். இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அருளை கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து அருளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக அரசிடமிருந்து ரூ. 2 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு வழக்குரைஞா் சசிரேகா, காவல் ஆய்வாளா் கன்னிகா, தலைமைக் காவலா் சுதாராணி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பாராட்டினாா்.