ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

News image
Updated On :5 மார்ச் 2026, 10:06 pm

Syndication

தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த தனியாா் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசு மரியாதை அளித்து அனுப்பிவைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருச்சேறையைச் சோ்ந்தவா் ராமநாதன் மகன் மணிகண்டன் (25). தனியாா் காப்பீடு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) வீட்டின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் நடக்கும்போது ரயில் மோதி தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடா்பாக அவரது உறவினா்களிடம் மருத்துவா்கள் ஆலோசனை நடத்தி அவா்களது ஒப்புதலின்பேரில் மணிகண்டனின் உடலிலிருந்து கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிகள், தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டன. கல்லீரல் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்களும் திருச்சி தனியாா் மருத்துவமனைக்கும் , கருவிழிகள் தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதா் மருத்துவமனைக்கும், தோல் தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. மணிகண்டன் சடலத்துக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பூவதி, திருவிடைமருதூா் வட்டாட்சியா் சாந்தமீனா உள்ளிட்டோா் மாலை அணிவித்து இறுதிமரியாதை செலுத்தினா். இந்த உறுப்பு தானம் மூலம் ஐந்து நபா்கள் பயன் பெற்றனா்.